Wednesday, January 16, 2008

Chennai Book Fair 2008 - Day 13

இன்றும் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதிகக் கூட்டம் வரும் என்று எதிர்பார்த்த பதிப்பாளர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். நாளையோடு புத்தகக் காட்சி முடிவடையும் நிலையில் முதல் ஞாயிறு அன்றும் கழிந்த சனி, ஞாயிறு அன்றும் நடந்த விற்பனை போல மற்ற நாள்கள் விற்பனை இல்லை. நிறைய விடுமுறை நாள்கள் இருந்தும் விற்பனை மந்தமே. இது குறித்து ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். இடம் எளிதாக வரும் இடமாக இல்லாதது, பேருந்துகள் சரியாக இல்லாதது, ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கொஞ்சம் தூரம் நடக்கவேண்டியிருப்பது, சங்கமம் நிகழ்ச்சி என பல்வேறு காரணங்களைச் சொன்னார்கள். பபாஸி நிர்வாகம்,ஆறுவழிகளில் கூட்டம் செல்வதால் குறைவாக இருப்பதாகத் தோன்றுவதாகவும், உண்மையில் கூட்டம் அதிகமே என்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன்.

எப்படியிருந்தாலும் கழிந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு கூட்டம் குறைவு என்பதே என் அபிப்பிராயம்.

நாளை நிறைவுநாள். நாளை எப்படி கூட்டம் வரும், விற்பனை நடக்கும் என்று கணிக்கமுடியாது. குறைவாகவே இருக்கும் என்று பொதுவாகப் பேசிக்கொண்டார்கள் பதிப்பாளர்கள்.

பதிவு: ஹரன் பிரசன்னா


பத்து நிமிடத்தில் படம் வரையும் ஓவியர்




எழுத்தாளர் பவா செல்லத்துரை




பழ. நெடுமாறன்




கவிஞர் வைரமுத்து




வைரமுத்து கையெழுத்திடுகிறார்.




கோபல்ல கிராமம் நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளியீடு - தமிழினி அரங்கில்




எழுத்தாளர் மணா - பழ.நெடுமாறன்




வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்




எழுத்தாளர் வேதசகாயகுமார்




கி.ரா. - மொழிபெயர்ப்பாளர் சுப்ரமணியன்




புத்தக வெளியீடு


மேலே உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெற்றுப் பயன்படுத்த வேண்டுகிறோம்.