Tuesday, January 15, 2008

Chennai Book Fair 2008 - Day 12

இன்று விற்பனையும் கூட்டமும் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்த்த பதிப்பாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்றே சொல்லவேண்டும். காலையில் கூட்டம் மந்தமாக இருந்தது. மூன்று மணிக்குப் பின்னர் கூட்டம் வரத் தொடங்கியது. அப்போதும் விற்பனை என்னவோ மந்தமாகவே இருந்தது. இன்று வந்த கூட்டம் புத்தகக் காட்சியைச் சுற்றிப் பார்க்க வந்த கூட்டம் போலும். இன்றைக்கு அதிக விற்பனை கேண்டீனில்தான் இருந்திருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

சுஜாதா உயிர்மை அரங்கில் ரசிகர்களுக்குக் கையெழுத்திட்டார். சின்ன நிகழ்ச்சியாக வலைப்பதிவர் வா.மணிகண்டனின் கவிதைத் தொகுப்பான 'கண்ணாடிக்குள் அலையும் வெயில்' புத்தகத்தை சுஜாதா வெளியிட நடிகை ரோகினி பெற்றுக்கொண்டார். சுஜாதாவின் ரசிகர்கள் அவரிடம் வரிசையாகக் கையெழுத்துப் பெற்றார்கள். கடந்தமுறை கடும் கூட்டத்திற்கிடையில் சுஜாதா கையெழுத்திட்டார். இன்றைக்குக் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்ததால், அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அவரிடம் கையெழுத்துப் பெற்றார்கள். வா.மணிகண்டனுக்கு என் வாழ்த்துகள்.


பதிவு: ஹரன் பிரசன்னா



சாளரம் பதிப்பக அரங்கு




எழுத்தாளர், பத்திரிகையாளர் மணா




எழுத்தாளர் ராஜ சுந்தரராஜன்




எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன்




மக்கள் தொலைக்காட்சியில் கருத்துக் கேட்பு




சுஜாதாவிடம் மக்கள் தொலைக்காட்சி கருத்துக் கேட்பு, உடன் கவிஞர் மனுஷ்யபுத்திரன்




கையெழுத்திடும் சுஜாதா




மனுஷ்ய புத்திரன் - வா.மணிகண்டன் - சுஜாதா




சுஜாதா நூலை வெளியிட ரோகினி பெற்றுக்கொள்கிறார்




அன்னா கண்ணன்





இயக்குநர் பாலுமகேந்திரா - கவிஞர் பிரான்ஸிஸ் கிருபா




கவனத்தைக் கவர்ந்த தட்டியின் ஒரு பக்கம்




கவனத்தைக் கவர்ந்த தட்டியின் மறுபக்கம்



மேலே உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெறுமாறு வேண்டுகிறோம்.