Saturday, January 12, 2008

Chennai Book Fair 2008 - Day 09

இன்று விடுமுறை நாள் ஆதலால் கடுமையான கூட்டம். ஆறு வழிகளில் புத்தக அரங்கிற்குள் நுழையலாம் என்கிற வசதியின் பயனை பல பதிப்பாளர்கள் நேற்று உணர்ந்திருப்பார்கள். சென்ற முறை விடுமுறை நாள்களின் போது முதல் வரிசையிலும் இரண்டாவது வரிசையிலும் நல்ல விற்பனையும் கடைசி வரிசைகளில் மந்தமான விற்பனையும் இருந்தன. இந்தமுறை எல்லா நுழைவாயிலிலும் வாசகர்கள் அனுமதிக்கப்பட்டதால் இந்தக் குறை ஓரளவு நீங்கியது என்றே நான் நினைக்கிறேன். அதுமட்டுமில்லாமல் வாசகர்கள் எந்த வழியாகவும் எந்தக் கடைக்கும் செல்லலாம் என்கிற சுதந்திரமும் இருக்கிறது. இதன் காரணமாக ஒன்றிரண்டு பதிப்பகங்களை வாசகர்கள் பார்க்காமல் சென்றுவிடக்கூடிய பாதிப்பு இருக்கிறது என்பது சில பதிப்பாளர்களின் கருத்து. ஆனால் ஆறு நுழைவாயிலிலும் வாசகர்கள் வரலாம் என்பது சிறப்பான ஏற்பாடாகவே தோன்றுகிறது.

நேற்று இராம கிருட்டிணன், ஹைகூ கணேஷ், நேசமுடன் வெங்கடேஷ், அருள்செல்வன் கந்தசாமி, இகாரஸ் பிரகாஷ் போன்ற இணைய முகங்களைப் பார்க்கமுடிந்தது.

பெருமாள் முருகன், யூமா வாசுகி, கிருஷாங்கினி, அழகிய சிங்கர், இரா.ஸ்ரீனிவாசன், யுவன் சந்திரசேகர், இரா.முருகன், பக்தவத்சல பாரதி, சிபிச்செல்வன் உள்ளிட்ட எழுத்தாளர்களையும் பார்க்கமுடிந்தது.

பொது அரங்கில் கவியரங்கம் நடைபெற்றது. கூட்டம் அதிகம் இருந்ததாலோ என்னவோ சுறுசுறுப்படைந்த பபாஸிக்காரர்கள் தொடர்ந்து மைக்கில் இந்தக் கவியரங்கம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டவண்ணம் இருந்தார்கள். ஒவ்வொரு பதிப்பாளரும் இன்னொரு அரங்கிற்குச் சென்று ஹாயாக பேசிக்கொண்டிருக்கும் காட்சிகளையெல்லாம் நேற்று பார்க்கமுடியவில்லை.

இனிவரும் நான்கு நாள்களும் இதே கூட்டம் இருக்கவேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

பதிவு: ஹரன்பிரசன்னா




இராம கிருட்டிணன்



அருள்செல்வன் கந்தசாமி - இகாரஸ் பிரகாஷ்














எழுத்தாளர் வெங்கடேஷ்




ஹரன் பிரசன்னா - இரா.முருகன்




பக்தவத்சல பாரதி





யூமா வாசுகி




இரா.ஸ்ரீனிவாசன் - சிபிச்செல்வன் - அழகியசிங்கர்



மேலே உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெறுமாறு வேண்டுகிறோம்.